பேரிச்சம் பழத்தின் நன்மைகள் இவைகள்தான்!!

பேரிச்சம் பழம் ஒரு பாக்கெட் 50 ரூபாய் என்ற அளவில் துவங்கி விற்பனையாகி வருகின்றது. மருத்துவர்களும் உடல் நலமில்லாமல் இருப்போரைத் தினமும் ஒரு பேரிச்சம் பழம் என்ற அளவில் எடுத்துக் கொள்ள அறிவுறுத்துவர்.

இத்தகைய பேரிச்சம்பழத்தின் நன்மைகள் என்ன என்பது குறித்து நாம் இப்போது பார்க்கலாம். இரத்த சோகைப் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் 3 பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியடைந்து இரத்த சோகைப் பிரச்சினை சரியாகும்.

பேரீச்சம் பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், டயட் இருப்பவர்கள் நிச்சயம் எடுத்துக் கொள்ளலாம். மேலும் குழந்தைகளுக்கு பேரீச்சம்பழத்தினை தேனில் ஊறவைத்துக் கொடுத்தால் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் பேரிச்சம் பழத்தை எடுத்துக் கொண்டால்தான் குழந்தை சத்துப் பற்றுக்குறை இல்லாமல் இருக்கும். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இரத்தப் போக்கினால் இரத்தம் குறைவதை பேரிச்சம்பழம் ஈடுகட்டுவதாக உள்ளது.
 
குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கவும், சுறுசுறுப்பாக செயல்படவும் பேரீச்சம்பழம் முக்கிய பங்காற்றுகின்றது. எலும்பு தேய்மானப் பிரச்சினையானது முதியோர்களுக்கு அதிக அளவில் இருக்கும், அதனைச் சரிசெய்ய பேரிச்சம்பழம் சாப்பிடுவது நல்லது.

பற்களினை உறுதிப்படுத்துவதிலும் பேரிச்சம்பழம் முக்கிய பங்கு வகிப்பதாக உள்ளது. 

Published by
Staff

Recent Posts