திருவண்ணாமலை அதிசயம்

ஞானிகளும் யோகியர்களும் வாழ்ந்து மறைந்தும் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அற்புத மலை திருவண்ணாமலை ஆகும். நினைத்தாலே முக்தி தரும் அக்னி ஸ்தலம் இதுவாகும். இங்கு அண்ணாமலையாரும் உண்ணாமலையம்மனும் அருள்பாலித்து மக்களின் துன்பங்களை தீர்த்து வருகின்றனர்.

இங்கு 13 கிமீ சுற்றளவில் அண்ணாமலையாரை சுற்றி வரும் வகையில் கிரிவலப்பாதை உள்ளது. ஒவ்வொரு பவுர்ணமிக்கும் கிரிவலம் வருவதற்கு மக்கள் இங்கு கூடுவர்.இங்கு இன்றும் பல அதிசய சம்பவங்கள் ஏதாவது நடந்து கொண்டேதான் இருக்கும்.

சில வருடங்கள் முன் கிரிவலப்பாதையில் சித்தர் ஒருவர் பறந்து சென்ற வீடியோ எல்லாம் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் தற்போது இங்கு சில நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரல்  ஆகி வருகிறது. சாதாரணமாக எடுக்கப்பட்ட மேகமூட்டம் சிவலிங்கம் போல் உள்ளது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Published by
Staff

Recent Posts