உலகக் கோப்பை, ஐபிஎல் கோப்பை அனைத்தையும் விட்டு வைக்காத வீரர்!! யார் இந்த தோனி?

1983 ஆம் ஆண்டு நம் இந்தியா முதல் உலகக் கோப்பையை வெற்றி பெற்றது. இதில் கேப்டனாக இருந்தார் கபில் தேவ். அந்தப் போட்டிக்கு முன்பு வரை கபில் தேவ் மீது அந்த அளவிற்கு ரசிகர்கள் நம்பிக்கை என வைக்கவில்லை.

83

அதிலும் அப்போதைய காலங்களில் மேற்கத்திய தீவுகள் அணிகள் மிகவும் தீவிரமாக விளையாட்டு விளையாடும் போல் காணப்பட்டது. அதற்கு பின்பு இந்தியாவிற்கு சிறந்த கேப்டன்கள் வந்தாலும் உலகக் கோப்பை என்பது கையில் கிடைக்காததாகவே காணப்பட்டது.

குறிப்பாக ராகுல் டிராவிட், கங்குலி போன்ற சிறந்த கேப்டன்கள் வந்தாலும் கோப்பை என்பது கைக்கு கிடைக்காமலேயே போனது. மேலும் ரசிகர்களிடையே அப்போது சச்சின் டெண்டுல்கர் மிகவும் ஃபேமஸ் ஆக உருமாறி இருந்தார்.

Sachin Tendulkar 770x433 1

ஏனென்றால் அவர் கரீசுக்கு வந்தாலே சதம் அடிப்பது வாடிக்கையாக கொண்டிருந்தார். ஒருவேளை அவர் விக்கெட்டை பறிகொடுத்தால் கிரிக்கெட்டை பார்ப்பதை கூட ரசிகர்கள் நிறுத்தி விடுவார்கள்.

இத்தகைய நம்பிக்கையின்மையை போக்கும் வகையில் இந்திய அணிக்கு தலைசிறந்த கேப்டனாக வந்தார் எம் எஸ் தோனி.

dhoni

ஆரம்பத்தில் இவர் விக்கெட் கீப்பர் களமிறங்கிய பின் தனது திறமையை ஒவ்வொன்றாக நிரூபித்து இந்திய கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார்.

உலகில் எந்த ஒரு கேப்டனும் செய்யாத செயலையும் செய்து தற்போது வரை சாதனையை வைத்துள்ளார் எம் எஸ் தோனி. ஏனென்றால் இருபது ஓவர், டெஸ்ட் மற்றும் 50 ஓவர் போட்டிகளுக்கான உலகக் கோப்பையை வென்ற ஒரே வீரர் என்று பெருமையும் மகேந்திர டோனி பெற்றுள்ளார்.

தோனி

அதோடு மட்டுமில்லாமல் ஐபிஎல் போட்டியிலும் இவர் சிஎஸ்கே அணிக்காக நான்கு முறை கோப்பையை வாங்கி கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய கிரிக்கெட் ஜாம்பவானுக்கு இன்றைய தினம் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனால் ரசிகர்கள் மற்றும் என்று பிரபலங்கள் அனைவரும் மகேந்திர சிங் தோனிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews