நவராத்திரியின் முதல் மூன்றுநாள்கள் துர்க்கை அம்மன்

நவராத்திரிக்கு அதிதேவதை துர்க்கை. அகத்தையும், புறத்தையும் அழகுபடுத்தி தூய்மைப்படுத்துவதற்காக துர்க்கை முதலில் வருகிறாள். முதல் ராத்திரியின் போது துர்க்கையை அலங்கரித்து வழிப்பட்டால் சர்வமங்கள ரூபிணியாக அவள் நமது கிரகத்தில் கொலு வீற்றிருப்பாள்.


     இரண்டாவது ராத்திரியின் போது ஆபரணங்களை அவளுக்கு அணிவித்தால் சர்வபூர்ண பூஜிதமாக அருள் பாலிப்பாள். மூன்றாவது ராத்திரியின் போது முதலில் செய்த பூஜைகளுக்கு மகிழ்ந்து ஞானத்தை நமக்கு அளிக்கிறாள்.

     துர்க்கையே முதல் மகளாக இருப்பதால் நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் துர்க்கையே இடம் பெற்று நம் அனைவரின் துயர் துடைக்கிறாள். இதனால் நவராத்திரி முதல் மூன்று நாட்கள் துர்க்கையை நாம் அனைவரும் முதலில் பூஜிக்கிறோம்.

      அகத்தையும் புறத்தையும் அழகுபடுத்தி தூய்மைப்படுத்துவதற்காகவே துர்க்கை அம்மன் முதலில் வருகிறாள். ஆபரணங்கள் அணிவித்து அவளுக்கு பூஜை செய்தால் சர்வபூர்ண பூஜிதமாக அருள் பாலிப்பாள். நவராத்திரியின் போது முதலில் நாம் துர்க்கையை பூஜை செய்து வணங்குகிறோம்.

Published by
Staff

Recent Posts