தெலுங்கில் கலக்கி வரும் தமிழ் இயக்குனர் கருணாகரன் – ப்ளாஷ்பேக்!

தமிழில் இயக்குனர் கருணாகரனை பற்றி அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள். தெலுங்கில் இவர் மோஸ்ட் வாண்டட் இயக்குனர்.


1998ல் இவர் இயக்கிய தொழி பிரேமா என்ற தெலுங்கு படம் ஆந்திராவில் பட்டி தொட்டி சிட்டி எங்கும் வெற்றி வாகை சூடியது. தமிழில் வந்த சேது படத்தை போல திடீர் அசுர வெற்றி பெற்றது இப்படம்.

குடும்பத்தினரோடு அனைவரும் பார்த்து மகிழும் வகையில் அற்புதமான காதல் கதையாக இது இருந்தது.

இரண்டு நந்தி அவார்டுகளையும், சிறந்த மாநில மொழிப்படத்திற்கான தேசிய விருதையும் வென்றது இப்படம்.

தமிழில் இப்படம் ஆனந்த மழை என்ற பெயரில் வந்தது. தெலுங்கில் பவன் கல்யாண், பூமிகாவும், தமிழில் பவன் கல்யாண், கீர்த்தி ரெட்டியும் நடித்திருந்தனர்.

தமிழுக்கும் தெலுங்குக்கும் தேவா இசையமைத்திருந்தார்.

இப்பட இயக்குனர் இன்று வரை தெலுங்கில் முன்னணி இயக்குனராவார். இவர் இயக்கிய தொழி பிரேமாவே இவருக்கு இத்தகைய நட்சத்திர அந்தஸ்து பெற்று கொடுத்தது.

இன்று வரை இவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர், இவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த தமிழர் ஆவார்.

Published by
Staff

Recent Posts