மீண்டும் நடிப்பில் களமிறங்கிய ஷாலினி! சம்மதிக்க வைத்த அஜித்!

குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ஷாலினி. அதன் பிறகு அவர் தமிழில் காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து அவருக்கு பல திரையுலக வாய்ப்புகள் குவிந்து வந்தது.

ஆனால் ஷாலினிக்கு படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது என்ற காரணத்தினால் இனி எந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். ஆனால் அதே நேரத்தில் ஏற்கனவே சில மலையாள படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்ததால் அந்த படங்களை மட்டும் முடித்துவிட்டு அவர் முழுமையாக படிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் தான் சரண் இயக்கத்தில் அமர்க்களம் என்று திரைப்படம் உருவானது, இந்த படத்தில் ஷாலினி நடித்தால் நன்றாக இருக்கும் என சரண் முடிவு செய்து ஷாலினியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் நான் ஏற்கனவே கமிட்டான படங்களை முடித்துவிட்டு படிக்கப் போகிறேன் என்றும் தன்னால் இனிமேல் நடிக்க முடியாது என்றும் ஷாலினி கூறிவிட்டார்.

இந்த நிலையில் தான் அஜித்திடம் சரண் கூறிய போது நான் வேண்டுமானால் பேசிப் பார்க்கிறேன் என்று அஜித் கூறினார். அப்போது அவர் ஷாலினியிடம் போன் மூலம் தொடர்பு கொண்டு உங்களுடன் நடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் எனக்காக இந்த ஒரே படத்தில் மட்டும் நடிக்க முடியுமா என்று கூறியுள்ளார்.

எனக்காக என்று அந்த ஒரு வார்த்தையின் காரணமாக தான் அந்த ஒரு படத்தில் மட்டும் நடிக்க ஷாலினி ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது சரணிடம் அஜித் இந்த படத்தை விட்டு விட்டு எடுக்க வேண்டாம் மொத்தமாக 50 நாட்கள் கால்ஷீட் தருகிறேன் தொடர்ந்து முடித்து விடுங்கள் என்று கூறியிருந்தார். எதற்காக என்று கேட்ட போது நான் ஒரு வேலை ஷாலினியை காதலித்து விடுவேனோ என்று பயமாக இருக்கிறது அதனால் தான் என அனைவரின் முன்பும் கூறியுள்ளார் அஜித்.

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் நடிகைக்கு இப்படி ஒரு சம்பவமா? கண்ணீருடன் பகிர்ந்த சில நினைவுகள்!

அப்போது பக்கத்தில் நின்று ஷாலினி வெட்கத்தினால் சிரித்ததை அடுத்து ஷாலினி மனதிலும் அஜித் மீது காதல் உள்ளது என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து தான் ஒருவரை ஒருவர் பேசி காதல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர் என்பதும் ஷாலினி வீட்டிலும் அஜித் வீட்டிலும் பேசிய பிறகு திருமணத்தை உறுதி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஷாலினி தனக்கு சிறுவயதிலேயே தெரியும் என்றும் ஷாலினியை தான் சிறு வயதிலேயே பார்த்து ரசித்ததாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Velmurugan

Recent Posts