விநாயகர் வழிபாட்டில் மிகவும் சிறப்பான வழிபாடு சங்கடஹர சதுர்த்தி வழிபாடு. அமாவாசையிலிருந்து நான்காம் நாளும் பௌர்ணமியிலிருந்து நான்காம் நாளும் சதுர்த்தி விரதம் வரும். பௌர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி “சங்கடஹர சதுர்த்தி” ஆகும். விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரும் சதுர்த்தி “மஹா சங்கடஹர சதுர்த்தி” ஆகும். மஹா சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
பிள்ளையாருக்கு வெள்ளை எருக்கு மற்றும் அருகம்புல் மாலை சாற்றி வழிபடலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விரமிருந்து வழிபட்டால் சகல யோகங்களும் கிடைக்கும்.
அருகிலுள்ள விநாயகர் கோயிலில் நடக்கும் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்டு வழிபடலாம். இதன் மூலம் துன்பங்கள் விலகி நன்மைகள் நடைபெறும்.