திரும்பவும் வரப்போகும் ஊ சொல்றியா!… இந்த முறை ஆடபோவது யாருனு தெரியுமா… தரமாக களமிறங்கும் புஷ்பா2…

2021ஆம் ஆண்டு அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் புஷ்பா. இப்படத்தினை இயக்குனர் புஷ்பா இயக்கியிருந்தார். இபப்டத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடிகை ரேஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் இப்படத்தில் ஃபகத் ஃபாசில், பிரியாமணி போன்ற நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்தில் நடித்ததற்காக இப்படத்தின் கதாநாயகனான அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. இப்படம் ரிலீஸ் ஆனதிற்கு பின் இப்படத்தின் இரண்டாம் பாகம் வரபோவதை படக்குழு அறிவித்திருந்தனர். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிவிட்டது.

கமல் – மணிரத்தினம் கூட்டணியில் இணையும் நயன்தாரா! நயனின் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?

இப்படம் வருகின்ற 2024ஆம் ஆண்டு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்படத்திற்கான வேலைகள் அனைத்தும் நடைபெற்று கொண்டுவருகிறது. இப்படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதைகளில் நடித்துவந்த சமந்தா இப்படத்தில் ஐட்டம் டான்ஸராக ஆடியிருந்தார். ஊ சொல்றியா… மாமா ஊ…ஊ.. சொல்றியா பாடல் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தது. இப்பாடலுக்கு பின் சமந்தாவிற்கு பல பட வாய்ப்புகள் வந்தன.

இந்த இயக்குனரின் கதையா ஷங்கரின் அடுத்த படம்?! சூப்பர் காம்போ!

தேவிஸ்ரீ பிரசாத் இடையில் இப்பாடம் பட்டையை கிளப்பியது. இது சமந்தாவின் மார்கெட்டையே தூக்கிவிட்டது என்றுதான் கூற வேண்டும். இப்பாடல் வெற்றி பெற்றதையடுத்து இதன் இரண்டாம் பாகத்திலும் இது போலவே ஒரு பாடலை வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளனராம்.

அப்பாடலுக்கு சமந்தாவையே ஆட வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சமந்தாவிடம் பேச்சுவார்த்தையும் நடந்து வருவதாக தெரிகிறது. சமீபத்தில் சமந்தா தனது ஹாட்டான படங்களை தனது சமூல வலைதள பக்கத்தில் வெளியிட்டு பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதெல்லாம் நடக்குற காரியமா? தளபதி 68 பற்றி வாயைத் திறக்காத மோகன்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...