மாவட்ட தலைவர் கூட்டம் முடிந்ததும் அதிரடி அறிவிப்பா? ரஜினியின் திட்டம்



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ள நிலையில் இன்று அவர் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்களை சந்திக்க இருக்கிறார். ரஜினிகாந்த்துக்கு சொந்தமான ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இந்த சந்திப்புக்குப் பின்னர் அதிரடி அறிவிப்பு வெளியாகலாம் என கருதப்படுகிறது

பொதுவாக மாவட்ட செயலாளர்களை ரஜினிகாந்த் தனது வீட்டில் மட்டுமே வரவழைத்து ஆலோசனை செய்வார். ஆனால் இந்த முறை திருமண மண்டபத்திற்கு அனைவரையும் வரச் சொல்லி இருப்பதால் மாவட்ட செயலாளர்களின் கூட்டத்திற்கு பின்னர் அதிரடி அறிவிப்புகளை அவர் ஊடகங்கள் மூலம் வெளியிட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

இந்த செய்தி வெளியானதிலிருந்து கோடம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஜினியின் அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Published by
Staff

Recent Posts