புத்தியில் வைப்போம்- தேவாரப்பாடலும், விளக்கமும்


பாடல்…

வண்மைதரும் ஆகமநூல் வைத்த பொருள்வழுவா
உண்மை விளக்கம் உரைசெய்யத் – திண்மதம்சேர்
அந்திநிறத் தந்திமுகத் தொந்திவயிற் றைங்கரனைப்
பந்தமறப் புந்தியுள்வைப் பாம்

விளக்கம்…

உரை செய்ய வளப்பத்தைத் தருகின்ற ஆகம நூலிலே பரமேசுவரன் அருளிச்செய்து வைத்த பதிபசுபாசங்களாகிய முப்பொருளின் உண்மை வழுவாமல் இவ்வுண்மைவிளக்க நூலிலே விளக்குதற்பொருட்டும், பந்தம் அற பாசங்கள் நீங்குதற்பொருட்டும், திண்மதம்…. ஐங்கரனை செக்கர்வானம் போன்ற திருமேனியினையும் யானை முகத்தினையும் தொந்தி வயிற்றினையும் ஐந்து கரங்களையுமுடைய விநாயகக் கடவுளை, புந்தியுள் வைப்பாம் சித்தத்தில் வைத்துத் தியானஞ் செய்வாம்.

Published by
Staff

Recent Posts