மேடை நடன கலைஞர்களுக்கு நிவாரண நிதி கொடுங்க… கண்ணீர் மல்கக் கூறும் மன்சூரலிகான்!!

கொரோனா வைரஸ் தொற்று உலகினை ஆட்டிப் படைத்து வருகின்றது, இந்தியாவில் மார்ச் மாத துவக்கத்தில் கொரொனா தொற்று ஏற்பட்ட நிலையில், கொரோனா தொற்று தற்போது தீவிரமாகியுள்ளது.

இதனால் ஊரடங்கானது மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 14 ஆம் தேதி வரை முதல் கட்டமாக பிறப்பிக்கப்பட்ட நிலையில், மேலும் இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த ஊரடங்கால் ஏழை எளிய மக்களின் இயல்பு வாழ்க்கையானது பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்துடன் உதவியுடன் தமிழக அரசு மக்களுக்கு பண உதவி, பொருளதவியினை வழங்கி வருகின்றது.


அரசாங்கத்திற்கு ஒத்துழைக்கும் வகையில், சினிமாப் பிரபலங்கள் பலரும் மக்களுக்கு பண உதவிகளையும் பொருள் உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

மேடை நடன கலைஞர்களுக்கும் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்க வேண்டும், என்று நடிகர்  மன்சூரலிகான், கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, “ஊரடங்கால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தினைச் சரிசெய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். அரசாங்கம் பொதுமக்களுக்கு உதவுவதுபோல் மேடை நடன கலைஞர்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும்” என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.

Published by
Staff

Recent Posts