சபரிமலை ஐயப்பனை வழிபட்டால் நம் வாழ்வில் 16 வகையான செல்வங்களையும் பெற முடியும், அதாவது ஐயப்பன் பூஜையானது மற்ற கடவுள்களின் பூஜையில் இருந்து வேறுபட்டது. சபரிமலைக்கு மாலையிட்டு நடைபயணம் மேற்கொண்டு ஐயப்பனை தரிசித்து வரும் பக்தர்களுக்கே அந்த மகிமை தெரியும்.
அதாவது ஐயப்பனின் முழு அருளைப் பெற நினைப்போர், படி பூஜை செய்வதற்கு முக்கியத்துவம் கொடுப்பர். இந்த படி பூஜையினை செய்ய பக்தர்கள் பலரும் போட்டியிட்டு இன்னும் 15 ஆண்டுகள் வரையிலான முன்பதிவினை புக் செய்து முடித்துவிட்டனர்.
ஐயப்பனுக்கு செய்யப்படும் பூஜைகள்:
இந்தப் பூஜையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது படி பூஜை. மற்ற 4 பூஜைகளால் கிடைக்கும் பலனை இந்த ஒரு பூஜை செய்தாலே பெற்றுவிட முடியும் என்பது நம்பிக்கை.