கொரோனா எதிரொலி: திருவண்ணாமலை கிரிவலம் இல்லை



தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தமிழக அரசு கொரோனா வைரசை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது

இந்த நிலையில் சமூக விளைவுகளை கடைபிடிக்கும் வகையில் வரும் 7ம் தேதி நடைபெறும் கிரிவலத்தில் யாருக்கும் பங்கு கொள்வதற்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இது குறித்து கருத்து கூறிய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாலும், சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்பதாலும் ஏப்ரல் 7ஆம் தேதி பவுர்ணமியன்று கிரிவலம் ரத்து செய்யபப்டுவதாக கூறியுள்ளார் இதனால் கிரிவல பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்

திருவண்ணாமலை, கிரிவலம், கொரோனா, வைரஸ்,

Published by
Staff

Recent Posts