நவராத்திரி-இந்தியா முழுவதும் களை கட்டும் துர்க்கா பூஜை

நவராத்திரி வந்து விட்டாலே அம்பிகையின் ஆலயங்களில் எல்லாம் ஆன்மிகம் மணக்கும் அளவு மாலையில் , பூஜை,புனஸ்காரங்கள், பொங்கல், சுண்டல் நைவேத்யங்கள் என களைகட்டும்.


தமிழ்நாட்டில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது, மைசூர், பெங்களூருவிலும் சிறப்பாக தசரா என்ற பெயரில் களை கட்டி உள்ளது நவராத்திரி கொண்டாட்டம்.

இதுபோல் நவராத்திரி கொண்டாட்டத்துக்கு புகழ்பெற்ற இன்னொரு மாநிலம் மேற்கு வங்கம் ஆகும். இங்கு நவராத்திரி, விஜயதசமியோடு பத்து நாட்களும் மிக விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

இறுதி நான்கு நாட்கள் துர்க்கா பூஜை செய்யப்படுவது இங்கு வழக்கம் ஆகும். முருகனை கார்த்திகேயன் என்ற பெயரிலும் விநாயகர் லட்சுமி, சரஸ்வதியோடு சேர்த்து புடைசூழ இவர்களை வழிபடுகிறார்கள்.

தெலுங்கானா பகுதியில் பாதுகாம்மா என்று துர்க்கை அம்மனை அழைக்கிறார்கள். காஷ்மீரில் சாரிகை என்ற பெயரிலும், மைசூரில் சாமுண்டீஸ்வரி எனவும் துர்கை அம்மனை அழைப்பதுண்டு.

இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் நவராத்திரி பூஜை களை கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தாவில் பந்தல்கள் அமைத்து துர்காவை ஊரெங்கும் வழிபடுகின்றனர். சாக்லேட்டில் துர்க்கை அம்மன் சிலையை கடந்த வருடம் வடிவமைத்திருந்தனர்.

நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா துர்கா பூஜைக்கான பந்தலை திறந்து வைத்தார்.

இப்படியாக துர்கா பூஜை இந்தியா முழுவதும் களை கட்டி வருகிறது.

Published by
Staff

Recent Posts