இவைகள்தான் வித்தியாசமான கோலத்தில் நரசிம்மர் அருளும் தலங்கள்..



மனித உடலும் சிங்கமுகமும் கொண்ட நரசிம்மமூர்த்தி சில திருத்தலங்களில் வித்தியாசமாகவும் காட்சி தருகிறார்.   திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் வட்டத்திலுள்ள பொன்னியன்மேடு ன்ற திருத்தலத்தில் நின்ற கோலத்தில் அபய ஹஸ்தத்துடன் அருள்புரிகிறார். ஏழு அடி உயரத்தில் காட்சிதரும் இவர் நான்கு கரங்களுடன் திகழ்கிறார்.  

நாமக்கல் மாவட்டம் குடைவரைக் கோவிலில் நரசிம்மர் மூலவராக வீராசனத்தில் அமர்ந்த நிலையில் காட்சிதருகிறார். இரணியன் வயிற்றைப் பிளந்த கைகள் என்பதற்கேற்ப சிவப்பு நீரோட்டத்துடனும் நகங்கள் ரத்தக்கறைச் சிவப்புடனும் இருப்பதை தரிசிக்கலாம். 

யோக நரசிம்மர், வீர நரசிம்மர், உக்கிர நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், கோபநரசிம்மர், சுதர்சன நரசிம்மர், அகோர நரசிம்மர், விலம்ப நரசிம்மர், குரோத நரசிம்மர் என முக்கியமான 9 வகை நரசிம்ம வடிவங்களை வகைப்படுத்தி வணங்கினாங்க. இவைத் தவிர பஞ்சமுக நரசிம்மர், விஷ்ணு நரசிம்மர், ருத்ர நரசிம்மர்ன்னு தங்கள் அன்புக்கும், பக்திக்கும் ஏற்ப நரசிம்மரை பல வடிவங்களிலும் நரசிம்மரை உருவாக்கி வணங்கினர் நம் முன்னோர். நரசிம்மரை வணங்கி பயமில்லாமல் ராஜ வாழ்வு வாழ்வோம்!

Published by
Staff

Recent Posts