கடைசி நேரத்திலும் கமலின் மகளுக்காக எம்ஜிஆர் கொடுத்த அன்பு பரிசு என்ன தெரியுமா?

முன்னணி நடிகர் எம்ஜிஆரை நடிகர் என சொல்லுவதை விட வள்ளல் என்று தான் பலரும் சொல்வார்கள். தான் சம்பாதித்த பணத்தில் பெரும் பங்கு மற்றவர்களுக்காகவே கொடுத்தவர் தான் எம்ஜிஆர். அவர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை எல்லாம் தன்னிடம் உதவி என வந்தவர்களுக்கு வாரி கொடுத்தார். அதற்கு காரணம் அவர் வறுமையின் உச்சத்தை பார்த்தவர், யாரேனும் தனக்கு உதவ மாட்டார்களா என ஏங்கியவர்.

நாடகங்களின் நடித்தால் மட்டும் தான் எம்ஜிஆருக்கு மூன்று வேலை சாப்பாடும், உடையும் கிடைக்கும். அப்படி கஷ்டப்பட்டு தான் எம்ஜிஆர் மேலே வந்தார். எம்ஜிஆர் தன்னை தேடி வருபவர்களுக்கு மட்டுமல்லாமல்,அவர் செல்லும் வழியில் யாரேனும் கஷ்டப்படுவதை பார்த்தால் உடனே வண்டியை நிறுத்தி அவர்களுக்கு உதவி செய்துவிட்டு தான் அங்கிருந்து செல்வார்.

தான் சிறுவயதில் கஷ்டப்பட்டபோது மற்றவர்களின் உதவியால் வளர்ந்ததால் நிறைய சம்பாதிக்கும் போது எல்லோருக்கும் உதவ வேண்டும் கொடுக்க வேண்டும் என்கின்ற எண்ணம் எம்ஜிஆருக்கு வாலிப வயதிலேயே ஏற்பட்டது.

இது ஒரு புறம் இருக்க அவருக்கு மிகவும் பிடித்தவர்கள், அவரிடம் அன்பாக இருப்பவர்கள், அவரின் நம்பிக்கைக்கு உரியவர்கள் என எல்லோருக்கும் பணமாகவோ, நகையாகவோ அல்லது வேறு வழியிலோ எதையாவது கொடுத்துக் கொண்டே இருப்பார். அவருடன் நடித்த சில நடிகைகளுக்கு நகைகளையும் பரிசாக எம்.ஜி.ஆர் கொடுத்திருக்கிறார். இதை பல நடிகைகள் பேட்டியில் கூறியிருக்கிறார்கள்.

இந்நிலையில் எம்ஜிஆரின் உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பியதும் கமலஹாசனை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். இந்த தகவல் கமல்ஹாசனுக்கு தெரிய வர அப்போது சிறுமியாக இருந்த ஸ்ருதிஹாசனையும் துக்கிக்கொண்டு ராமாபுரம் தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது எம்ஜிஆர் தனது மனைவியின் விலைமதிப்பான நகைகளை அள்ளி கமலிடம் கொடுத்துள்ளார். இதையெல்லாம் உன் மகளுக்கு போட்டுவிடு என சொன்னதாக கூறப்படுகிறது. இதை பார்த்து கமல் நெகிழ்ந்துள்ளார். கமல் சிறுவயதாக இருக்கும் போது அவரை தூக்கி கொஞ்சியவர் எம்ஜிஆர்.

நயன்தாராவிற்கு முன்பே திருமண வீடியோவை பல கோடிகளுக்கு விற்ற நடிகை புன்னகை அரசி!

ஆனந்த ஜோதி படத்தில் சிறுவனாக எம்ஜிஆர் உடன் கமல் நடித்துள்ளார். கமலின் வளர்ச்சியை படிப்படியாக பார்த்தவர் எம்ஜிஆர். அதனால் கமல்ஹாசன் மீது எப்போதும் அன்பு கொண்டிருந்தார், கமலுக்கு நிறைய அறிவுரைகளையும் சொல்லி இருக்கிறார் எம்ஜிஆர்.

மேலும் சகலகலா வல்லவன் படத்தை பார்த்துவிட்டு இதைத்தானே நான் செய்து கொண்டிருக்கிறேன், நீ புதிதாக ஏதாவது பண்ணு என கமலை வேறு பக்கம் திருப்பி விட்டார் எம்ஜிஆர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews