ஊரடங்கு உத்தரவு இன்னும் ஆறு மாதங்களுக்கு நீடிக்குமா? அதிர்ச்சித் தகவல்



இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியாவில் மேலும் 6 மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக வெளிவந்த தகவலால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

இதுகுறித்து அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று, இந்தியாவில் ஜூன் மூன்றாவது வாரத்தில் தான் கொரொனா உச்சகட்டத்தில் இருக்கும் என்றும் எனவே ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது

ஆனால் இதனை மத்திய அரசு உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு மாதங்கள் ஊரடங்கு என்பது இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் சாத்தியமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

Published by
Staff

Recent Posts