முகம் பளபளன்னு மின்ன கடலைப் பருப்பு ஃபேஷியல்!!

என்னதான் கிரீம் போட்டாலும் முகம் சில மணி நேரத்திலேயே பளபளப்புத் தன்மையை இழந்துவிடுகிறதா? இனி கவலை வேண்டாம் வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு முகத்தினை பளபளன்னு மின்னச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

கடலைப் பருப்பு- கைப்பிடியளவு,

துளசி இலை – 20 இலைகள்

வேப்பங்கொழுந்து- 20 கிராம்

செய்முறை:

  1. துளசி இலை மற்றும் வேப்பம் கொழுந்தினை வெயிலில் காய வைத்துக் கொள்ளவும்.
  2. அடுத்து கடலைப் பருப்பினை லேசாக வறுத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  3. அடுத்து மிக்சியில் காயவைத்த இலைகளை அரைத்து இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்தால், நிச்சயம் முகம் பளபளன்னு மின்னும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

Published by
Staff

Recent Posts