கோவில்களுக்கு செல்லும்போது தலைமுடியை விரிச்சு போடக்கூடாது.. ஏன்?!

018eea91c5c4218a28f99922b806ce77

கோவில்களில் முப்பத்து முக்கோடி தேவர்களும், தெய்வங்களும் குடி கொண்டிருக்கும். சப்த கண்ணியர், நவக்கிரகங்கள், பூதகணங்கள், துவார பாலகர்கள்ன்னு சிறிய, பெரிய தெய்வங்கள்லாம் வீற்றிருக்கும். நம் ஆன்மா மட்டுமே தூய்மையானது . ஆனா, நமது உடல் அப்படி அல்ல!
ஆதலால் நாம் தெய்வ விக்கிரங்களை தொடுதல் கூடாது.

அப்படி இருக்க, பெண்கள் தலைமுடியை முடிக்கமால், லூஸ் ஹேர் எனப்படும் தலைவிரிகோலமாய் கோவிலுக்கு வருவது சாத்திர முறைப்படி தவறு.தலை விரிக்கோலம் என்பது துக்க வீட்டின் அடையாளம் என சாஸ்திரம் கூறுகிறது.அவ்வாறு நீங்கள் தலை விரிக்கோலத்துடன் செல்லும் பொது ஒரு சிறிய முடி கீழ விழுந்தாலும் அது தெய்வங்களை கோபமுறசெய்யும். இது மாதிரி நடந்தால் அம்மன் வடிவ தெய்வங்கள் பொறுத்துக்கொள்ளும்
ஆனால் தேவர்கள் அவ்வாறு இல்லை. கோவில் குளத்தில் குளிச்சு இறைவனை தரிசித்தாலும் இந்த நிலைதான். அதுமாதிரியான நேரங்களில் தலைமுடியின் நுனியிலாவது சிறிய முடிச்சு போட்டுக்கிட்டு கோவிலுக்குள் செல்வது நல்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews