கொரோனா ஒழிப்பு- முன்னாள் கிரிக்கெட் வீரரான இந்நாள் டி.எஸ்.பிக்கு ஐசிசி பாராட்டு

கடந்த 2007ம் ஆண்டு நடந்த 2020 உலக கோப்பை போட்டியின் பைனலில் பாகிஸ்தானின் மிஸ்பா உல் ஹக் அடித்து மிரட்ட, கடைசி ஓவரின் கடைசி பாலை யாரை வீச சொல்வது என முடிவெடுத்து கேப்டன் தோனி முடிவெடுத்து ஜோகிந்தர் சர்மாவை வீச சொல்ல அந்த பாலை மிக துல்லியமாக அவர் வீச ஸ்ரீசாந்த் கேட்ச் பிடித்து இருந்த ஒரே விக்கெட்டான மிஸ்பாவையும் வெளியேற்றினார்.


அதிர்ச்சிகரமான இந்த வெற்றியை இந்தியா மறந்திருக்காது. அதன் பின் ஜோகிந்தர் சர்மாவுக்கு அவர் திறமையை பாராட்டி அவர் மாநிலமான ஹரியானாவில் டி.எஸ்.பி பணி வழங்கப்பட்டது.

டி.எஸ்.பி பணியையே முழு நேர பணியாக அவர் தொடர்ந்து செய்து வருகிறார்.தற்போதுள்ள கொரோனா தடுப்பு பணிகளில் விழிப்புணர்வு அவர் ஒரு டி.எஸ்.பியாக அவர் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம் இதனால் அவருக்கு ஐசிசி கடும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

Published by
Staff

Recent Posts