கொன்றை மலர்மாலை சூடியவன்- தேவாரப்பாடலும், விளக்கமும்



பாடல்..

ஆகந் தோய்அணி கொன்றை யாய்அனல் அங்கை யாய்அம ரர்க்கம ராவுமை
பாகந் தோய்பக வாபலி யேற்றுழல் பண்டரங்கா
மாகந் தோய்பொழில் மல்குசிற் றம்பலம் மன்னி னாய்மழு வாளி னாய்அழல்
நாகந் தோய்அரை யாய்அடி யாரைநண் ணாவினையே.

விளக்கம்..

திருமேனியில் தோய்ந்த அழகிய கொன்றை மாலையை யுடையவனே! தீ ஏந்திய திருக்கையனே! தேவ தேவனே! அம்பிகை பாகமுடைய பகவனே! பலி ஏற்றுத் திரியும் பாண்டரங்கக் கூத்தனே! வானளாவிய சோலைகள் நிறைந்த திருச்சிற்றம்பலத்தே நிலைபெற்றவனே! மழுவாளை ஏந்தியவனே! நச்சுத் தீயையுடைய அரவக் கச்சணிந்த திருவரையினனே! உன் அடியவரை வினைகள் அடையா. (ஆதலின், உனக்கு அடிமை பூண்ட எமக்கும் வினை இல்லை என்றவாறு.)

Published by
Staff

Recent Posts