கிரகப்பிரவேசத்தில் முதலில் பசு, கன்றினை ஏன் அழைத்து செல்கிறார்கள்?!

56e457cd13725b8c823871393f56702f

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன. அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகியவை. இவை பொன்னிறம், கருமை, வெண்மை, புகை, சிவப்பு நிறத்தில் இருந்தது. இவற்றின் சந்ததிகளே பூலோகத்தில் நமக்கு உதவியாக வாழ்கின்றது. மாடுகள் செல்வத்தின் குறியீடு.

1a1f807d0deb2cca3ee967066093aa16

பசுக்களின் சாணம், கோமியம், பால், தயிர், வெண்ணெய் ஆகிய ஐந்தும் புனிதமானவை. இவற்றை குறிப்பிட்ட அளவில் கலந்து சிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகமே பஞ்சகவ்ய அபிஷேகம் எனப்படுகிறது. இப்பசுக்களில் மும்மூர்த்திகள், சத்தியம், தர்மம் என்று எல்லா தேவதைகளும் வசிக்கின்றனர். செல்வவளம் தரும் திருமகள் பசுவின் பிருஷ்டபாகத்தில் வசிக்கிறாள். இப்பகுதியை தொட்டு வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் விலகும். காலையில் எழுந்ததும் பசுவைத் தொழுவத்தில் காண்பது சுபசகுனம். தெருக்களில் கூட்டமாகப் பார்த்தால் இன்னும் விசேஷம். பாற்கடலில் பிறந்த ஐந்து பசுக்களும் கோலோகம் என்னும் 
பசுவுலகில் இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். பசுவைத் தெய்வமாக வழிபட்டால் கோலோகத்தை அடையும் பாக்கியம் !!! அதுமட்டுமில்லாமல் பசுவின் உடலில் முப்பெருந்தேவியர்களும், மும்மூர்த்திகள் உட்பட முப்பத்து முக்கோடி தேவர்களும் இருப்பதாய் ஐதீகம்.

4ff39529480bcb7223cfed2c7b6ed940-2

புதுவீட்டில் முதன்முதலாய் பசுவினை அழைத்துச்செல்வது அனைத்து தெய்வங்களை அழைத்து செல்வதற்கு சமமானது,. பசுவோடு கன்றினை அழைத்துச்செல்வது, செல்வவளத்தோடு, குழந்தை செல்வமும் கிடைத்து குடும்பத்துடன் மகிழ்ச்சியோடு இருக்கவே இந்த பழக்கம் உண்டானது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews