கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் 25ல் இருந்து அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டது. பஸ் சேவை, ரயில் சேவை போன்ற அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்ட நிலையில் மக்களின் வாழ்வு வீட்டோடு முடங்கியது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சில ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதுவும் ரத்து செய்யப்பட்டது. முன்பதிவு செய்தவர்கள் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டது.
இருப்பினும் அடுத்த லாக் டவுன் இன்னும் 10 நாட்களில் முடிவடைவதால் ஜூண்1 முதல் ரயில் சேவை இயக்கப்படும் என தெரிகிறது. இதற்காக நாடெங்கும் பயணிக்கும் 200 ரயில்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக முன்பதிவும் நடைபெறுகிறது.