ஜெயம் ரவி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கல்யாணிக்கு இப்படி ஒரு நிலைமையா?

பிரபல நடிகையும் வீஜேயுமான நடிகை கல்யாணி தனக்கு ஏற்பட்ட உடல் பிரச்சனை குறித்தும் அதனால் அவர் மேற்கொண்ட அறுவை சிகிச்சை குறித்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள தகவல் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை கல்யாணி தமிழ் சினிமாவில் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடிகர் பிரபுதேவா ஹீரோவாக நடித்த அள்ளித் தந்த வானம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து இயக்குனர் மோகன் ராஜாவின் ஜெயம் படத்திலும் சதாவின் தங்கையாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார்.

இந்த இரண்டு படங்களுமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்த நிலையில் இதைத்தொடர்ந்து சில சீரியல்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பிறகு வெள்ளி துறையில் கதாநாயகியாக அறிமுகமான இவர், சின்ன துறையில் வீஜே மற்றும் சீரியல் நடிகையாக இருந்து வந்தார்.

பிரபல தொலைக்காட்சியில் தாயுமானவர், ஆண்டாள் அழகர், கங்கா போன்ற சீரியல்களிலும் நடித்து வந்த கல்யாணி கடந்த 2014 ஆம் ஆண்டு ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சின்ன துறையில் இருந்து விலகிய கல்யாணி சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது தனக்கு முதுகுத்தண்டு மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவரது பதிவில் தனக்கு ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும் ஆனால் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு மீண்டும் எனக்கு முதுகு மிகவும் வலிக்க ஆரம்பித்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயிலர் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா? அப்டேட்டால் கொண்டாடும் ரசிகர்கள்!

ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சை பிரச்சனை சரியாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார். எனவே இந்த முறை மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், அதன்படி வேறு ஒருவரின் முதுகுத்தண்டு எனக்கு பொருத்தப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது ஐந்து வயது மகள் மற்றும் என்னுடைய கணவர் இருவரும் என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள் என கல்யாணி தெரிவித்துள்ளார். நடிகை கல்யாணிக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை குறித்து தகவல் தெரிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும் இவரது பதிவிற்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews