நான் ரொம்ப பிசி- இரண்டு மாதம் யாரும் தொடர்புகொள்ள வேண்டாம் வைரல் ஜோதிடர் பாலாஜி

சேலத்தில் எங்கோ ஒரு ஓரத்தில் ஜோதிடம் பார்த்துக்கொண்டிருந்த பாலாஜி இன்று உலகப்புகழ்பெற்ற ஜோதிடர் ஆகி விட்டார். மிக இளவயதுடைய பாலாஜி சிறுவயது முதல் ஜோதிடம் மீது கொண்ட மாறாதகாதலால் அதன் மீது ஈர்ப்புடன் இருந்து ஜோதிடம் பார்த்து வருகிறார்.


உலக கோப்பை கிரிக்கெட்டில் இருந்து உள்ளூர் அரசியல் நிகழ்வுகள் வரை மிக துல்லியமாக ஜாதகம் சொல்லி அனைவரிடத்திலும் பாராட்டு பெற்றுள்ளார் இவர். பல ஜாதகர்கள் சொல்வது பாதிதான் நடக்கும் அல்லது நடக்காமலே போய்விடும். ஆனால் இவர் சொல்வது 90 சதவீதம் துல்லியமாக நடப்பதுதான் ஆச்சரியமே.


சமீபத்தில் நடைபெற்ற உலக கோப்பையில் மட்டும் இவர் சொன்ன ஜோதிடம் சற்று சறுக்கலை ஏற்படுத்தியது. ஆனால் கடந்த வருடமே ஒரு தொலைக்காட்சி பேட்டியில் நியூசிலாந்தும், இங்கிலாந்தும்தான் மோதும் நியூசிலாந்து கோப்பை வெல்லும் என கூறி இருந்தார். யார் ஆட்ட நாயகனாக இருப்பார் என்பதையும் சொல்லி இருந்தார். நியூசிலாந்து கோப்பை வெல்லாவிட்டாலும் இவர் சொல்லிய விசயங்கள் பாதியாவது நடந்தன. யாருமே எதிர்பார்க்காமல் இறுதிப்போட்டி வரையாவது சென்றது நியூசிலாந்து.

கிரிக்கெட் போட்டி மட்டுமல்லாது உலக அளவில் நடந்த பல அரசியல், சினிமா நிகழ்வுகளை சமீப காலமாக மிக துல்லியமாக கூறி வருகிறார். இதனால் பல பிரபலங்களின் பார்வை இவர் மேல் வீச தொடங்கியுள்ளது.

ஷில்பா ஷெட்டி, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பிரபலங்கள் இவரின் தொடர் பேட்டியை பார்த்து இவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஒருவர் பிரதமராக ஜெயிக்கிறார் என்றால் அவர்தான் ஜெயிப்பார் என்று மட்டும் சொல்லாமல் யார் யார் அமைச்சரா வருவா எந்த துறைக்கு யார் அமைச்சரா இருப்பார். அஜீத்துக்கு இந்த படம் ஓடுமா ஓடாதா, விஜய்க்கு இந்த படம் எத்தனை நாள் ஓடும் அல்லது தோல்விப்படமா, போன்ற விசயங்களை துல்லியமாக கணிக்கிறார் என்பதுதான் இவரது வெற்றி.

ரஜினி 2022ல் அரசியலுக்கு வந்து 2024ல் வெளியேறுவார் என்று கூறி இருக்கிறார் இவர். ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்றும் கூறி இருக்கிறார் இவர். திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா,எம்.பி கனிமொழி உள்ளிட்டோரையும் இவர் நேரில் சந்தித்து உள்ளார்.

அஜீத் 100க்கு 200 ப்ரசண்ட் அரசியலுக்கு வரமாட்டார் என்றும் விஜய்யும் வரமாட்டார் என்றும் கூறி இருக்கிறார்.

ஓவர் நைட்டில் பாப்புலரான ஜோதிடர் என்பதால் திமுக குடும்பத்தினர் முதல், பல சினிமா அரசியல் பிரபலங்கள் வரை தங்களது ஜாதகத்தை கொடுத்து அப்பாயின்மெண்ட்டுக்காக காத்திருக்கின்றனர்.

இவரிடம் தற்போது 76 விஐபிகள் ஜாதகம் பார்க்க சொல்லி கேட்டு இருக்கிறார்களாம் அவர்களுக்கு முடித்த உடன் தான் எல்லோருக்கும் பார்க்க முடியும். இரண்டு மாதத்துக்கு தன்னை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என தனது முகநூல் பக்கத்தில் பாலாஜி கூறியுள்ளார்.

Published by
Staff

Recent Posts