குழந்தைகளுக்கு உணவு கொடுப்பது என்பது மிகப்பெரிய சவாலான விஷயம். தானாக உணவு உண்ணும் பொழுது குழந்தைகள் சரியாக உண்ண மாட்டார்கள் அதுமட்டுமின்றி உணவுப் பொருட்களை சிதறி விடுவார்கள் என நினைத்து பெரியோர்கள் தாங்களே குழந்தைகளுக்கு உணவு ஊட்டி விடுவார்கள்.
ஆனால் குழந்தைகளுக்கு உணவினை ஊட்டி விடுவதை விட தானாக எடுத்து உண்ண ஆரம்பத்திலேயே பழக்குவது மிகவும் நல்லது.
சாப்பாடு தானாக எடுத்து சாப்பிட கற்றுக் கொடுக்கும் பொழுது உணவோடு சேர்த்து பல நல்ல பழக்கங்களையும் அவர்களுக்கு புகட்ட முடியும்.
குழந்தைகள் உணவினை தானாக எடுத்து சாப்பிட கற்றுக் கொள்ளும் பொழுது அவர்கள் பிறரை சார்ந்தே இருக்க வேண்டும் என்ற நிலை இல்லாமல் சுதந்திரமாக எதையும் கற்றுக் கொள்ள தொடங்குவார்கள் மேலும் குழந்தைகளுக்கு தங்களின் வேலைகளை தாங்களே செய்கிறோம் என்ற தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
குழந்தைகள் உணவினை அவர்களாக சாப்பிடும் பொழுது உணவினை தொட்டு அதன் தன்மையை உணர்ந்து சாப்பிடுவார்கள். உணவின் வெப்பநிலை ஆகியன பற்றி அறிந்து கொள்வார்கள். தொடுதல், நுகர்தல், சுவைத்தல், போன்ற பல உணர்திறன்கள் வேலை செய்கின்றன. குழந்தைகளுக்கு மோட்டார் திறனும் அதிகரிக்கிறது.
குழந்தைகளுக்கு எப்படி உணவினை அவர்களாக சாப்பிட பழக்குவது என்று பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு 10ஆவது மாதம் முதல் 15ஆவது மாதத்திற்குள் அவர்களாக உணவு உண்ண பழக்க தொடங்கலாம்.
குழந்தைகளை அவர்களாக உணவு உண்ண உற்சாகப்படுத்துங்கள் இது அவர்களின் ஆரோக்கியமான உணவு பழக்கத்திற்கு வழிவகுக்கும்.