தலைமுடி உதிர்விற்குத் தீர்வு தரும் ஹேர் ஆயில்!!

தலைமுடி கொட்டும் பிரச்சினையினை சமாளிக்க முடியவில்லையே என வருத்தத்தில் இருக்கிறார்களா? டோன்ட் வொரி இந்த ஹேர் ஆயிலைப் பயன்படுத்தினால் முடி கொட்டும் பிரச்சினை காணாமல் போகும்.

தேவையானவை:

கரிசலாங்கண்ணி – கைப்பிடியளவு

வெட்டி வேர்- 20 கிராம்

விளக்கெண்ணெய்- 30 மில்லி

செய்முறை:

  1. கரிசலாங்கண்ணியினை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. அடுத்து வெட்டி வேரையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. விளக்கெண்ணெயினை லேசாக சூடாக்கி, கரிசலாங்கண்ணி மற்றும் வெட்டி வேரை அதில் போட்டு ஊறவிடவும்.

  1. நாட்கள் கழித்து இந்த எண்ணெயினை தலையில் தேய்த்து சீயக்காய் போட்டு குளிக்க முடி கொட்டும் பிரச்சினை காணாமல் போகும்.
Published by
Staff

Recent Posts