சிவப்பழகினைத் தரும் பச்சை திராட்சை ஃபேஸ்பேக்!!

சிவப்பழகினைப் பெற நினைப்போர் பலவகையான ஃபேஸ்பேக்குகளைப் பயன்படுத்துவதையும், பல வகையான செயற்கை கிரீம்களைப் பயன்படுத்துவதையும் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் இப்போது பச்சை திராட்சையில் ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

  1. பச்சை திராட்சைச் சாறு- 5,
  2. புதினா இலைகள்- கைப்பிடியளவு
  3. கஸ்தூரி மஞ்சள்- 1 ஸ்பூன்
  4. எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்

செய்முறை:

  1. பச்சை திராட்சையினை தோல் உரித்துக் கொள்ளவும்.
  2. அடுத்து அதனுடன் புதினா இலைகள் எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  3. அடுத்து அதனுடன் கஸ்தூரி மஞ்சளை சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் நிச்சயம் சிவப்பாகும். இதனை வாரத்தில் இரண்டுமுறை தொடர்ந்து செய்து வரவும்.

Published by
Staff

Recent Posts