பூந்தமல்லியை அடுத்த தனியார் கல்லூரி மாணவர்கள் ஒரே நேரத்தில் 200 ட்ரோன்களை பறக்கவிட்டு சாதனை செய்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி அடுத்த தனியார் கல்லூரி மாணவர்கள் ஒரே நேரத்தில் 200 ட்ரோன்களை பறக்க விட்டனர். அந்த ட்ரோன்கள் வானில் வர்ணஜாலம் காட்டியது பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தியது.
முதலில் ஹாய் என்று எழுத்துக்களுடன் தோன்றிய அந்த ட்ரோன்கள் அதன் பிறகு ரஜினிகாந்த் அப்துல் கலாம் உள்ளிட்ட உருவங்களையும் செய்து அசத்தியது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏஐ தொழில்நுட்பம் குறித்த சில உருவங்களையும் இந்த ட்ரோன்கள் வரிசைப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரோன்கள் தான் நமது இந்தியாவின் எதிர்காலம் என்றும் ட்ரோன்கள் மூலம் தான் அடுத்த தலைமுறைகள் அனைத்து பணிகளையும் செய்ய உள்ளார்கள் என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த ட்ரோன் கண்காட்சி நடத்தப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இனி அடுத்த கட்டமாக இதைவிட அதிக ட்ரோன்களை பறக்க விட்டு விண்ணில் வர்ணஜாலம் காட்ட மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.