சாண்டியின் கதையினைக் கேட்டு தெறித்து ஓடும் போட்டியாளர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சி 90 வது நாளை நெருங்க உள்ள நிலையில், டாஸ்க்குகள் கடுமையாக செல்லும் எதிர்பார்ப்பினை நிச்சயம் இன்று பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்ப்பு ப்ரோமோவிலேயே தெரிந்தது.

அதன்படி நேற்றைய நிகழ்ச்சி, “தேடிப் பிடிக்கவா?” என்ற பாடலோடு புலர்ந்தது. போட்டியாளர்களுக்கு அர்த்தம் புரிந்ததோ இல்லையோ, பார்வையாளர்களுக்கு நன்கு புரிந்திருக்கும்.

ff722f4ecc39268db26a04aa33217ae0

காலையிலேயே சாண்டி தன்னுடைய மொக்கை ஜோக்கினை சொல்லி எல்லோரையும் கடித்துக் கொண்டிருந்தார். அவர் சொன்ன கதையால் தர்சன் கடுப்பாகி ஓடிவிட்டார், முகின் மட்டும் அசராமல் கேட்டுக் கொண்டிருந்தார்.

அதன்பின்னர் சாண்டியிடம் மாட்டிக் கொண்டார் சேரன், அவரையும் உட்காரவைத்து கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார். அவர் தெறிச்சும் ஓட, அடுத்து அவரிடம் மாட்டிக் கொண்ட ஷெரின், கதையினை ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால் காதல் மன்னன் அய்யோ இதே கதையா? என தூங்கியேவிட்டார்.

இதனைப் பார்த்த பார்வையாளர்கள் பிக் பாஸ் குடுக்கிற டாஸ்க்கைவிட இது பயங்கரமா இருக்கே என்று கமெண்ட் அடித்துள்ளனர். இவருடைய கதையினை கேட்க முடியாமல் வீட்டைவிட்டு அனைவரும் ஓடி விடுவார்கள் போல என நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews