அரசு மட்டும்தான் அருள் செய்ய வேண்டுமா- வைரமுத்து கேள்வி

கொரோனா வைரஸ் பாதிப்பால் உணவு வழங்க முடியாத பல இடங்களுக்கு பல சமூக தன்னார்வல தொண்டர்கள் உணவு வழங்கி வருகின்றனர். அரிசி, மளிகை சாமான்கள் போன்றவற்றை இருக்கிறவர்களிடம் பெற்று இல்லாதவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

7badb8e7fe7817cd00dafa434c00e490-2

தெருவோர ஆதரவற்றவர்களுக்கும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தன்னார்வலர்கள் இது போல உணவு வழங்கும் பணியில் ஈடுபடக்கூடாது என்ற வகையிலும் இது சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காகவும் என்று கூறி இருந்தது. பின்பு அரசு அதிகாரிகளுடன் இணைந்து தன்னார்வலர்கள் செயல்படலாம் எனவும் அரசு கூறி இருந்தது.

இந்நிலையில் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த வேளையில் கவிஞர் வைரமுத்துவும் வழக்கம்போல் கவிதை எழுதிவிட்டார் அவர் டுவிட்டரில் எழுதி வெளியிட்டுள்ள கண்டன கவிதை.

அரசு மட்டும்தான் அருள் செய்ய வேண்டுமென்றால் அறமென்பதெதற்காக? ஆணிவேர் மட்டும்தான் நீர் வழங்க வேண்டுமென்றால் பக்க வேர்கள் எதற்காக? இப்படியாக வைரமுத்து எழுதியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...