கமலின் புரியாத வரிகள்- இலக்கணம் கேட்ட கஸ்தூரி

பொதுவாக கமல் எழுதும் பல வரிகள் யாருக்கும் புரிவதில்லை. கமலின் ஜனரஞ்சகமான படங்கள் ஓடிய அளவுக்கு, அவரின் வித்தியாசமான கருத்துக்களை கொண்ட படங்கள் வித்தியாசாமாக எடுக்கப்பட்ட பல படங்கள் அதிகம் ஓடாதது,பாமரர்கள் பலருக்கு புரியாதது தான் காரணம்.


கமல் எழுதுவதும் பேசுவதும் புரியவில்லை என பலர் சொல்லி வருகின்றனர். கமல் டுவிட்டரில் டுவிட் இட்டுவிட்டாலே உடனடியாக அது சமூக வலைதளங்களில் விவாத பொருளாகி விடும் அளவு உள்ளது.

கமலின் டுவிட் பெரும்பாலும் புரியாத கவிதை நடையில் உள்ளது ஒரு காரணம். நேற்றும் கமல் ஒரு டுவிட் இட்ட நிலையில், இரண்டு நாட்களாக பலருக்கும் புரியாத நிலை உள்ளது.

இதை பார்த்த நடிகை கஸ்தூரியும் இது லெட்டர் சீ மடல் இல்லை கடுதாசின்னு வச்சுப்போமா? வேண்டாம் கடிதமே இருக்கட்டும் . இலக்கணப்படி இந்த கவிதை எந்த வகை என கேட்டுள்ளார்.

Published by
Staff

Recent Posts