தமிழகத்தின் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவராக இருந்தவர். முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள். அதே போல் இன்னொரு ஆளுமையாக இருந்தவர் மறைந்தமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்.
இவர்கள் இருவரும் மாறி மாறி ஆண்டபோது நிர்வாக திறமையோடு ஆட்சி சிறப்பாக இருந்தது. இரண்டு பேரும் பெரிய தலைவர்கள் என்ற ஆளுமையும் இருந்தது.
தற்போதைய சூழலில் ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அப்படி ஒரு ஆளுமை இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
இதை சூசகமாக குறிப்பிடும் வகையில் திமுக தலைவராக இருந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பேரனும்,திமுக தலைவர் ஸ்டாலினின் அண்ணனான அழகிரியின் மகனும் திரைப்பட தயாரிப்பாளருமான தயாநிதி அழகிரி ஒரு டுவிட் மூலம் குறிப்பிட்டுள்ளார்.
தங்களின் எதிர்முகாமாக இருந்தாலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தையும் தன் தாத்தா கலைஞரின் படத்தையும் போட்டு லீடர்ஸ் ??? என கேள்வி குறி எழுப்பியுள்ளார் டூ யூ மிஸ் தெம் தமிழ்நாடு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதே போல திமுக தலைவராக இருக்கும் ஸ்டாலினின் குடும்பமும் அவரது அண்ணன் அழகிரி குடும்பமும் சரியான இணக்கத்துடன் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.