திருவுள்ளம் – தேவாரப்பாடலும், விளக்கமும்



பாடல்

தனதன்நற் றோழா சங்கரா சூல
பாணியே தாணுவே சிவனே
கனகநற் றூணே கற்பகக் கொழுந்தே
கண்கள்மூன் றுடையதோர் கரும்பே
அனகனே குமர விநாயக சனக
அம்பலத் தமரர்சே கரனே
நுனகழ லிணையென் நெஞ்சினுள் இனிதாத்
தொண்டனேன் நுகருமா

விளக்கம்..

குபேரனுடைய நண்பனே! எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்பவனே! சூலத்தைக் கையில் ஏந்தியவனே! என்றும் நிலை பெற்றிருப்பவனே! மங்களமான வடிவினனே! பொன் மயமான பெரிய தூண் போல்பவனே! கற்பக மரத்தின் கொழுந்தினை ஒப்பவனே! மூன்று கண்களை உடைய கரும்பு போன்ற இனியனே! பாவம் இல்லாதவனே! முருகனுக்கும் விநாயகனுக்கும் தந்தையே! பொன்னம்பலத்தில் தேவர்கள் தலைவனாக உள்ளவனே! உன் திருவடிகளை என் உள்ளத்தில் இனிமையாக அடியேன் அநுபவிக்குமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.

Published by
Staff

Recent Posts