நீலகண்டர்- தேவாரப்பாடலும், விளக்கமும்..


பாடல்..

கண்ணுதலுங் கண்டக் கறையுங் கரந்தருளி
மண்ணிடையின் மாக்கள் மலமகற்றும் – வெண்ணெய்நல்லூர்
மெய்கண்டான் என்றொருகால் மேவுவரால் வேறின்மை
கைகண்டார் உள்ளத்துக் கண்

விளக்கம்…

நெற்றியில் திருநயனமும் நீலகண்டமும் முதலியவற்றை மறைத்துத் தரையிடத்து அருள மாந்தரை யிருள்நீக்கும்படி மானிட யாக்கையால் வந்தவன் திருவெண்ணெய்நல்லூரிலே வாழும் மெய் கண்ட தேவனாதலால் அவனை ஒருகாற் சென்று பொருந்துவராயின் அருள்வேற்றுமையின்றி நிற்குமுறைமையை அவரே கரதலாமலகம் போற் கண்டா ரென்றவாறு.

Published by
Staff

Recent Posts