இன்று குசேலர் தினம்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நெருங்கிய நண்பர் குசேலர். குசேலர் மிக ஏழ்மையானவர் .ஏழ்மையுடன் அவர் கொடுத்த அவலை உண்டவர் கிருஷ்ணன் என புராணங்களில் சொல்லப்படுகிறது.


பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்குரிய குருவாயூரில் வருடத்தில் மார்கழி மாதம் வரும் முதல் புதன்கிழமை கிருஷ்ணர் அனுக்கிரகம் செய்த நாளாக கருதப்பட்டு

அன்று பக்தர்கள், இலையில் அவல், அச்சு வெல்லக்கட்டி ஆகியவற்றை கொண்டு வந்து குருவாயூரப்பனை வணங்குவது தொன்று தொட்டு வரும் மரபு.

கிருஷ்ணனின் தரிசனத்தால் குசேலருக்குக் கிடைத்த ஐஸ்வர்யம், அனைத்தும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் கிடைக்கவேண்டும் என வேண்டிக் கொண்டு, படிக்கணக்கில் இறைவன் கிருஷ்ணருக்கு அவல் காணிக்கை செலுத்துகின்றனர்.

Published by
Staff

Recent Posts