விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு விசில் போடு-வந்துவிட்டது பிளேயர்ஸ் லிஸ்ட்!

கடந்த இரண்டு நாட்களாக ஐபிஎல் 2022 ஆம் ஆண்டுக்கான ஏலம் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏனென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து முக்கிய நட்சத்திர பெயர்கள் வேறு அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தற்போது 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ள வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்கனவே தக்க வைக்கப்பட்ட வீரர்களில் அதிகபட்சமாக 16 கோடி ரூபாய் விலைக்கு எடுக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் ருத்ராஜ் பேட்ஸ்மேன் ஏற்கனவே தக்கவைக்க படை வீரர்களில் உள்ளார். அவர் இடத்தில் எடுக்கப்பட்ட தொகை 6 கோடி ஆகும்.  ஆல்ரவுண்டர் பிராவோ 4.40 கோடிக்கு எடுக்கப்பட்டுள்ளார். அம்பத்தி ராயுடு ஏலத்தில்  6.75 கோடிக்கு எடுக்கப்பட்டுள்ளார்.

ராபின் உத்தப்பா ஏலத்தில்  இரண்டு கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டுள்ளார். தீபக் சஹர் ஏலத்தில்  அதிகபட்சமாக 14 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டுள்ளார். சிவம் துபே ஏலத்தில்  4 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டோரியா 50 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். சாண்ட்னர் ஏலத்தில் 7.90 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.  ராஜ்வர்தன் 1.5 கோடிக்கு எடுக்கப்பட்டு உள்ளார். ஆடல் மில்னே 1.9 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். பிரசாந்த் சொலன்கி 1.2 கோடிக்கு எடுக்கப்பட்ட ஒரு கோடிக்கு  ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

Published by
Vetri P

Recent Posts