ஐஏஎஸ் தேர்வில் ChatGPT பயன்படுத்தி மோசடி.. தேர்வர் மீது வழக்குப்பதிவு..!

தெலுங்கானா மாநிலத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் ஏமாற்றுவதற்கு ChatGPT பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பூலா ரமேஷ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கானா மாநில நார்தர்ன் பவர் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி லிமிடெட்டின் பிரிவு பொறியாளர் பூலா ரமேஷ் என்பவர் ஐஏஎஸ் தேர்வின் கேள்விகளுக்கான பதில்களைப் பெற ஜெனரேட்டிவ் AI கருவியைப் பயன்படுத்தியதாக தெரிகிறது.

அவர் முதலில் வினாத்தாளை பெற்று, பின்னர் பதில்களை உருவாக்க ChatGPT ஐப் பயன்படுத்தியதாகவும், தேர்வின் போது அவர் பதில்களை ப்ளூடூத் இயர்பட்ஸ் மூலம் மற்ற தேர்வர்களுக்கு அனுப்பியதாகவும் தெரிகிறது.

ஐஏஎஸ் தேர்வுகளில் AI டெக்னாலஜி மூலம் மோசடி செய்யப்பட்டதாக முதல்முறையாக இந்தியாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு கவலைக்குரிய போக்கு என்றும், ஏனெனில் குற்றவாளிகள் தங்கள் முறைகளில் மிகவும் நுட்பமானவர்களாக மாறுகிறார்கள் என்றும், இந்தப் புதிய அச்சுறுத்தல் குறித்து தேர்வு வாரியங்கள் விழிப்புடன் இருப்பதோடு, மீண்டும் இது போன்ற சம்பவம் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பதும் முக்கியம் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்..

மோசடியைத் தடுக்க தேர்வு வாரியங்கள் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்த சில ஆலோசனைகளையும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். அந்த ஆலோசனைகள் இதோ:

* தேர்வு எழுதுபவர்களை தொலைதூரத்தில் கண்காணிக்க ப்ரோக்டரிங் சேவையைப் பயன்படுத்த வேண்டும்.

* மாணவர்களை அடையாளம் காணவும் கண்காணிக்கவும் பயோமெட்ரிக் முறையைப் பயன்படுத்த வேண்டும்.

* வினாத்தாள் கசிவுகளைத் தடுக்க தொடர்ந்து புதுப்பிக்கப்படும் கேள்வி முறையை பயன்படுத்த வேண்டும்.

* ஏமாற்றுவதால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் பிடிபட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், தேர்வு வாரியங்கள் தங்கள் தேர்வுகளின் நேர்மையைப் பாதுகாக்கவும், மிகவும் தகுதியான மாணவர்கள் மட்டுமே வெற்றி பெறுவதை உறுதி செய்யவும் உதவும்.

Published by
Bala S

Recent Posts