Categories: ஜோதிடம்

மாந்தியை கண்டு பயப்படலாமா

ஜாதகத்தில் மாந்தி இருக்கும் இடத்தை சில ஜோதிடர்கள் பார்க்கிறார்கள். குறிப்பாக கேரள ஜோதிடர்கள் பார்க்கிறார்கள். வியாசர் பகவான் அருளிய நவக்கிரக ஸ்தோத்திரங்கலில் மற்றும் ஆதி சங்கரர் அருளிய ஸ்தோத்திரங்கலிலும் சரி மேலும் காயத்திரி மந்திரங்களிலும் சரி மாந்திக்கு முக்கியத்தும் இல்லை.

மாந்தியை கேரளா மற்றும் ஆந்திரா ஜோதிடர்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். 

மாந்தியை கண்டு பயப்பட வேண்டாம் என்று சொன்னாலும், யாராவது ஒரு ஜோதிடரோ அல்லது நண்பரோ மாந்தி குறித்து உங்கள் ஜாதகத்தில் மாந்தி குறித்த நிலையில் ஏதாவது குழப்பம் வரும்படி சொன்னால் மனதிருப்திக்காக கீழ்க்கண்ட கோவில்களுக்கு செல்லலாம்.

கும்பகோணத்தில் உள்ள திருநாறையூர் கோவிலில் மாந்தி தனது தகப்பனார் சனீஸ்வரருடன் உள்ளார். சென்னை அடுத்த திருவள்ளூர் அருகே திருவாலங்காட்டில் மாந்தீஸ்வரர் என்று சிவன் தனியாக இருக்கிறார்.

இவர்களை வணங்கி வந்தாலே போதும் மாந்தி குறித்து அதிகம் பயப்பட தேவையில்லை.

Published by
Staff

Recent Posts