கடந்த ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ஆக இருந்த விளையாட்டு வீரர் ஒருவர் தற்போது அதே அணிக்கு பயிற்சியாளராக மாறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஐபிஎல் போட்டி ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் திருவிழா போன்று நடைபெற்று வருகிறது என்பதும் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி நடத்த தற்போது ஐபிஎல் நிர்வாகம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பிராவோ அறிவித்துள்ளார் இதனையடுத்து அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சி பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.