விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய பிக் பாஸ் குடும்பம்!!

பிக்பாஸ் நிகழ்ச்சி பேசப்படும் அளவு வேறு எந்த விஷயமும் பெரிதாக பேசப்படுவதில்லை, அந்த அளவு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருப்பதோடு, மக்கள் பலரையும் ஈர்த்த ஒரு நிகழ்ச்சியாக உள்ளது.

நேற்றைய நிகழ்ச்சியானது அதற்கு முந்தைய நாள் நிகழ்ச்சியின் நாமினேஷனுக்கு பிறகு ஏற்பட்ட சண்டையிலிருந்து தொடங்கியது. கவினும் சாண்டியும்  வனிதாவுடன் சண்டை போட்டனர். 


இந்த சண்டையால் தன்னை மீண்டும் மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளர் என்று ஒதுக்குவதை நினைத்து வருத்தமுற்று, வனிதா பிக்பாஸிடம் நியாயம் கேட்டு மைக்கை கழட்டிவிட்டார்.

இதனால் வனிதாவை பிக்பாஸ் கன்ஃபெஷன் ரூமுக்குள் அழைத்து, அவரவர் செய்வதனை மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். இதனை சரி என்று ஏற்றுக் கொண்டார் வனிதா.

அதன்பின்னர் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஃபார்ச்சூன் ஆயில் வழங்கிய அந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் ஃபார்ச்சூன் ஆயில் பயன்படுத்தி முருக்கு செய்யப்பட்டது.

வனிதா, சேரன், ஷெரின் ஆகியோர் அதனை செய்ய வழக்கம்போல் சாண்டி- கவின் குழு இதனை விளையாடிக் கொண்டிருந்தது. அதன்பின்னர் வனிதா சாமி கும்பிட சொல்லி அனைவருக்கும் விபூதி வைத்துவிட்டார்.

இறுதியில் அனைவரும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு வாழ்த்துகள் தெரிவித்ததுடன், ஃபார்ச்சூன் ஆயிலில் முருக்கு செய்து சாப்பிடுங்கள் என்று கூறினர்.

Published by
Staff

Recent Posts