கவின் மட்டும் எப்படி காப்பாற்றப்படுகிறார்?

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் கவின், சேரன், லாஸ்லியா மற்றும் ஷெரீன் ஆகியோர் இருந்தனர்.


இவர்களில் சேரன் நேற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் அவரது ரசிகள் அதிர்ச்சியடைந்தனர். தற்போது இந்த எலிமினேஷன் பற்றி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பொதுவாக கவினுக்கு எதிராகத்தான் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். அதனால் அவருக்கு அதிகம் வாக்குகள் கிடைக்கிற மாதிரியும் தெரியவில்லை. அப்படி இருக்கும்போது கவின் மட்டும் எப்படி காப்பாற்றப்படுகிறார் என பிக் பாஸ் ரசிகர்கள் கோபமாக கேட்டு வருகின்றனர்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் கவின், சாண்டி, தர்ஷன், முகேன், லாஸ்லியா மற்றும் ஷெரீன் என ஆறு போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இன்னும் பத்து நாட்களில் பிக் பாஸ் சீசன் 3 டைட்டிலை வெல்லப் போவது யார் எனத் தெரிந்துவிடும்.

Published by
Staff

Recent Posts