பாக்யராஜின் சஸ்பென்ஸ் த்ரில்லருக்கு 38 வயது

கடந்த 1981ம் ஆண்டு மே8 தேதி வெளியான திரைப்படம் விடியும் வரை காத்திரு.நீங்காத எண்ணம் ஒன்று, என்ற இந்த படத்தின் வெற்றிப்பாடலுக்கேற்ப இந்த படத்தின் நீங்காத எண்ணங்கள் ரசிகர்கள் மனதை விட்டு அகல போவதில்லை.


பாக்யராஜ் அந்த நேரங்களில்தான் சினிமாவில் கதாநாயகனாக ரீச் ஆகி கொண்டிருந்தார் தன் குருநாதர் பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்களை போல சஸ்பென்ஸ் த்ரில்லர் எடுக்க வேண்டும் என நினைத்தாரோ என்னவோ இந்த விடியும் வரை காத்திரு படத்தை இயக்கினார்.

சிகப்பு ரோஜாக்கள் கமல் போலவே கதாநாயகனும் இவரே வில்லனும் இவரே அது போல் ஒரு தோற்றத்தில் நடித்து இருந்தார்.

படத்தில் வரும் பாத்திரங்கள் அனைத்துமே தேர்ந்த விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தன. சும்மாவே பாக்யராஜ் ஆடுவார் இதுல சலங்கைய வேற கட்டி விட்டா ஆடாம இருப்பாரா?

குடும்ப படத்தையே சிறந்த திரைக்கதையின் மூலம் சீட்டின் நுனிக்கு வந்து பார்க்குமளவு இயக்கி திரைக்கதையில் பாக்யராஜ் விளையாடுவார். இது த்ரில்லர் படம் வேறு அல்லவா? இளையராஜா இசைவேறு எல்லாம் சேர்ந்து படம் பார்ப்பவர்களை திகிலில் மிரட்டின என்றுதான் சொல்லவேண்டும்.

சொத்துக்காக சத்யகலாவைத் திருமணம் செய்துகொண்டு, பிறகு அவரைக் கொல்ல முயற்சி செய்யும் கதாபாத்திரத்தில் பாக்யராஜ் நடித்திருப்பார்.

Published by
Staff

Recent Posts