இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே இருநாட்டு ரசிகர்களும் அதனை ஒரு போட்டியாக பார்க்காமல் போராக பார்க்கும் மனநிலை கடந்த பல வருடங்களாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று ஆசியா கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறவுள்ளது.
ஏ பிரிவில் ஹாங்காங் அணி இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளிடமும் தோல்வி அடைந்துவிட்டதால் போட்டியில் இருந்து வெளியேறிவிட்டது. இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் அடுத்த சுற்றுக்கு செல்வதை பாதிக்காது எனினும் இரு அணிகளும் இன்று ஆக்ரோஷமாக மோதும் என கருதப்படுகிறது.