அஜீத்தை மனமார பாராட்டிய கஸ்தூரி

நடிகர் அஜீத் கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக 50 லட்சம் மாநில அரசுக்கும் 50 லட்சம் மத்திய அரசுக்கும் 25லட்சம் பெப்ஸி யூனியனுக்கும் கொடுப்பதாக கூறியுள்ளார்.


தமிழ்நாட்டில் கொரோனா நடவடிக்கைக்கு அரசுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் பெரிய தொகையை கொடுத்த முதல் நடிகர் அஜீத்குமார்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பலரும் பாராட்டி வரும் அஜீத்தை நடிகை கஸ்தூரியும் பாராட்டியுள்ளார்.

வழக்கமாக கஸ்தூரியும் அஜீத் ரசிகர்களும் டுவிட்டரில் அடிக்கடி சண்டையிட்டு கொள்வர். அஜீத் ரசிகர்கள் எல்லை மீறி மோசமாக பேசுவதும் உண்டு.

இந்த நிலையில் தல அஜீத்தை வாழ்த்தியதற்கு சில நாகரீகமான ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். எப்போது தலயுடன் ஒரு படம் நடிக்கபோறிங்க எனவும் ஒரு ரசிகர் கஸ்தூரியிடம் கேட்டுள்ளார்.

Published by
Staff

Recent Posts