’வணங்கான்’ படத்தில் இருந்து சூர்யா திடீர் விலகல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு!

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் ’வணங்கான்’ என்ற திரைப்படம் உருவாகி வந்த நிலையில் அந்தப் படத்திலிருந்து சூர்யா விலகி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குனர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ’வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த மாற்றங்களினால் இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமோ என்ற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.

என் மீதும், இந்த கதையின் மீது முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.

எனவே ’வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒரு முடிவு எடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. ‘நந்தா’வில் நான் தான் பார்த்த சூர்யா, பிதாமகன் – இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி ’வணங்கான்’ பணிகள் தொடரும் என்று பாலா தெரிவித்துள்ளார்.

Published by
Bala S

Recent Posts