இப்பத்தான் FB, Insta எல்லாம்.. ஆனா அப்பவே பிரசாந்த் அதுல கில்லாடியாம்..!

இப்போது ஏதாவது ஒரு திரைப்படத்தில் ஒரு சிறிய காட்சியில் வந்தால் கூட பிரபலமாகிறார்கள். காரணம் சமூக வலை தளங்கள். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூ டியூப், எக்ஸ் என்று எதைப்பார்த்தாலும் அவர்களது புகைப்படங்கள் தினசரி இடம்பெற்று ஏராளமான லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் அள்ளி வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் அப்பவே நான் தான் முன்னோடி என்று டிஜிட்டல் கிங் ஆக வலம் வந்திருக்கிறார் டாப் ஸ்டார் பிரசாந்த்.

1990 களில் இளம் பெண்களின் கனவு கண்ணனாக திகழ்ந்தவர் பிரசாந்த். அஜித், விஜய் ஆகிய நடிகர்கள் சினிமாவில் வளர்ந்து வந்த காலகட்டத்தில் தனக்கென தனி டிராக் பிடித்து தனது வசீகரமான நடிப்பால் ரசிகர்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் இவர்.

பிரசாந்த் தமிழில் “வைகாசி பொறந்தாச்சு” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின் “செம்பருத்தி”, “கிழக்கே வரும் பாட்டு”, “”கண்மணி”, “ஆணழகன்” போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்தார். ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், காதல் கவிதை, ஜோடி, குட்லக், அப்பு, தமிழ், வின்னர் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து அதிக ரசிகைகளின் கனவு நாயகனாகத் திகழ்ந்தார்.

பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர மணிவண்ணன் செஞ்ச முரட்டு சம்பவம்..மிரண்டு போன இயக்குநர் இமயம்

எனினும் அதன்பின் வந்த “ஜெய்”, “லண்டன்”, போன்ற திரைப்படங்களை தொடர்ந்து பிரசாந்த்தின் கேரியர் சரியத்தொடங்கியது. குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளில் வெளியான “சாகசம்”, “ஜானி” போன்ற திரைப்படங்கள் படுதோல்வி அடைந்தன. இந்த நிலையில் பிரசாந்த்தை குறித்த ஆச்சரியத்தக்க தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.

அதாவது பிரசாந்த் 1990களிலேயே இன்டெர்நெட் குறித்து அதிகமாகத் தெரிந்து வைத்திருந்தாராம். அப்போது இருந்த பத்திரிக்கையாளர்கள் பலருக்கும் அந்த காலகட்டத்தில் இருந்த “ஹாட் மெயில்” வலைத்தளத்தில் Email idக்களை உருவாக்கித் தருவாராம் பிரசாந்த்.

“இனி இன்டெர்நெட்தான் எதிர்காலமே” என்று பலரிடமம் கூறிக்கொண்டிருப்பாராம். 1999 ஆம் ஆண்டு “இன்தாம்” என்று ஒரு இணையத்தளப் பத்திரிக்கை இருந்ததாம். அப்போது இணையத்தளம் குறித்த எந்த ஒரு புரிதலும் இல்லாத காரணத்தால் நடிகர்கள் இணையத்தளத்திற்கெல்லாம் பேட்டிகள் கொடுக்கமாட்டார்களாம்.

21 நாட்களாக தவித்த எம்.எஸ்.வி, கண்ணதாசனுக்கு சிவாஜி கொடுத்த க்ளு.. ‘எங்கே நிம்மதி..‘ பாடல் உருவான விதம்

ஆனால் “இன்தாம்” இணையத்தளத்திற்கு அப்போதே பிரசாந்த் பேட்டி அளித்திருக்கிறாராம். மேலும் பிரசாந்த் அந்த காலகட்டத்திலேயே லேப்டாப் ஒன்று வைத்திருந்தாராம். செய்தி ஊடகத்திற்கு பிறகு இனி வருங்காலத்தில் இணையத்தளங்கள்தான் உலகை ஆளப்போகிறது என அப்போதே கூறினாராம். இவ்வாறு வருங்காலத்தை குறித்து அன்றே கணித்திருக்கிறார். தற்போது அந்தகன் மற்றும் திகோட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பிரசாந்த்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...