தமிழ் சினிமா கொண்டாடாத இயக்குனர் ஏ.எஸ் பிரகாசம்

இயக்குனர் ஏ.எஸ் பிரகாஷம் ஒரு காலத்தில் சிறந்த கதை வசனங்களை எழுதியவராகவும் சிறந்த திரைக்கதையாளராகவும், சிறந்த இயக்குனராகவும் அறியப்பட்டாலும் அவ்வளவாக வெளியில் தெரியாதவர்.


தற்கால தலைமுறைக்கு பாக்யராஜ், பாரதிராஜா என அந்நாளைய 80களின் பிரபலங்களை தெரியும். ஆனால் இவரை தெரியாது.

ராஜரிஷி, சூர்யகாந்தி, அந்தமான் காதலி உள்ளிட்ட பல படங்களின் கதையாளராக அறியப்பட்டவர் இவர்.

இவர் இயக்கிய மூன்று முத்தான படங்கள் எச்சில் இரவுகள், சாதனை, ஆளப்பிறந்தவன். வித்தியாசமான கதைக்களம் கொண்டவை மூன்று படங்களும் அதில் எச்சில் இரவுகள், திரைப்படம் இதுவரை யாரும் சொல்லாத பிச்சைக்காரர்களின் கதைக்களம் ஆகும்.

புகழ்பெற்ற முகலாய பேரரசின் அக்பரின் மகன் சலீமுக்கும் , அனார்கலி என்ற பெண்ணுக்கும் ஏற்பட்ட அமரத்துவ காதலை வித்தியாசமான பாணியில் இப்போது இருக்கும் இளைஞருக்கு அது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் சினிமாவில் நடிக்கும்போது ஏற்பட்டதை அழகாக விளக்கி இருப்பார்.

இளையராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும் சேர்ந்து கொள்ள படம் இனிமையாக அழகாக வந்தது. இன்று வரை 80களின் ரசிகர்களால் மறக்க முடியாத படமாக இது அமைந்துள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இப்படத்தில் படத்தின் கதைக்கேற்ப இயக்குனராக நடித்திருந்தார்.

இதைப்போலவே தமிழ் சினிமாவில் இது வரை யாரும் தொடாத களம் . சமூகத்தை அழிக்கும் சில விரோதிகளால் தன் தாய் தந்தையை இழந்த சிறுவன், நாடக நடிகராக மன்னர் வேஷம் போட்டு மக்களின் குறைகளை கேட்டு கொண்டிருக்கும் சத்யராஜின் நாடகம் நடக்கும் இடத்துக்கு சீரியஸாகவே தன் குறைகளை சொல்கிறார். இதனால் வெகுண்டெழும் சத்யராஜ் அயோக்கியர்களை அழிப்பதுதான். சாதாரண மசாலாக்கதைதான் என்றாலும் அதை இவர் சொல்லிய விதம் புதுசு.

இயக்குனர் ஏ.எஸ் பிரகாசத்தின் படங்கள் காலத்தால் அழியாதவை. அவரை பற்றி தற்போதிருக்கும் சினிமா ரசிகர்களும் தெரிந்துகொள்ளவே இந்த பதிவு.

Published by
Staff

Recent Posts