30 வருடம் கம்ப்ளீட் செய்த சூரசம்ஹாரம்

பாரதிராஜவிடம் அசோசியேட்டாக இருந்து பின்பு தயாரிப்பாளராக அவதாரமெடுத்து பின்பு இயக்குனராகவும் தற்போதைய காலத்தில் நடிகராகவும் இருந்து வருபவர் சித்ரா லட்சுமணன் அவர் இயக்கிய படமே சூரசம்ஹாரம்.


போதைப்பொருள் கடத்தும் கும்பலுக்கும் கமல்ஹாசனுக்கும் நடக்கும் கதையே படத்தின் ஒன்லைன்.

போலீஸ் அதிகாரி கமலின் தங்கையே போதைக்கும்பல் பிடியில் சிக்கி தவிப்பதும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் அழகாக படமாக்கி இருப்பார் சித்ரா லட்சுமணன்.

அதிவீரபாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் கமல் நடித்திருந்தார்.

வில்லனாக கிட்டியும் , தக்காளி சீனிவாசனும் மிரட்டி இருப்பார்கள்.

பாடல்கள் இசைக்கு கேட்கவா வேண்டும்.இளையராஜாவின் இசை படத்துக்கு இதம் சேர்த்தது. இப்படத்தில் தான் பாடகர் அருண்மொழி பாடகராக நான் என்பது நீயல்லவோ பாடல் மூலம் அறிமுகம் ஆனார்.

மனோ பாடிய வேதாளம் வந்திருக்குது என்ற பாடல் வித்தியாசமான பாடலாக இருந்தது. இதில் மனோ சுத்தமாக தனது குரலை மாற்றி வேறு மாதிரி பாடி இருந்தார்.

இந்த வெற்றிப்படம் வெளியாகி 30 வருடங்கள் ஆகிறது. கடந்த 30.7.1988 ம் ஆண்டு வெளியானது.

Published by
Staff

Recent Posts