திருமணத்தின்போதும், யாரையாவது வாழ்த்தும்போதும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க” என்று கூறி வாழ்த்துவதை பார்த்திருக்கோம். பதினாறுன்னா பிள்ளைகளா?! போதுமா?!ன்னு கிண்டலா சொல்வோம். ஆனா, பிள்ளைச்செல்வத்தோடுக்கூடிய 16 செல்வங்கள் ஒரு மனிதனின் வாழ்வுக்கு முக்கியமானது. அவை எவைன்னு தெரிஞ்சுக்கலாமா?!
கலையாத கல்வி
கள்ளமில்லா நட்பு குறையாத வயது
குன்றாத வளமை
மறையாத இளமை
பரவசமான பக்தி
பிணியற்ற உடல்
சலியாத மனம்
அன்பான துணை
தவறாத சந்தானம்
தாழாத கீர்த்தி
மாறாத வார்த்தை
தடையற்ற கொடை
தொலையாத நிதி
கோணாத செயல்
துன்பமில்லா வாழ்வு எனச்சொல்லப்படும் 16 பேறுகள்தான் பெரியவர்களின் வாழ்த்தில் இடம்பெறுவதாகும்..